< font color="white">All Tips
Showing posts with label Health. Show all posts
Showing posts with label Health. Show all posts

Thursday, 12 April 2018

வெயில் சருமத்தைக் காக்கும் கிர்ணி பழ ஃபேஸ்பேக்

              வெயில்     சருமத்தைக்   காக்கும்  கிர்ணி   பழ   ஃபேஸ்பேக்

                                       
                   

    கிர்ணி பழத்தில் புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகம் உள்ளதால், கேசத்துக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது.
 
தோலில் உள்ள எண்ணெய்ப் பசை குறைந்து சருமம் வறண்டு காட்சியளிப்பவர்கள் கிர்ணி பழ ஜுஸ், வெள்ளரி ஜுஸ் இரண்டையும் தலா ஒரு தேக்கரண்டி கலந்து தோலின் மீது தடவினால் தோல் மிருதுவாகும்.

கிர்ணி பழ விதையைக் காய வைத்து பவுடராக்கி 100 கிராம், ஓட்ஸ் பவுடர் 100 கிராம் எடுத்து அத்துடன் தேவையான அளவு வெள்ளரி ஜுஸ் கலந்து பசையாக்கி. கூந்தல் முதல் பாதம் வரை தேய்த்துக் குளித்தால், எண்ணெய் தேய்த்துக் குளித்தது போன்று குளிர்ச்சியாகவும் வாசனையாகவும் இருக்கும். கிர்ணி பழ விதை, தலைமுடிக்கு நல்ல கண்டிஷனராக செயல்படும்.

சிலருக்கு முகத்தில் அடிக்கடி வியர்த்துக் கொட்டி முகம் டல்லாக இருக்கும், அவர்கள் கிர்ணி பழத்துண்டு ஒன்றை எடுத்து மசித்து முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

இரண்டு தேக்கரண்டி வெள்ளரி ஜூஸூடன், இரண்டு தேக்கரண்டி கிர்ணி பழ விழுதைச் சேர்த்து, 4 (அ) 5 துளி எலுமிச்சைச் சாறு கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி நன்றாகக் குலுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து, வெளியில் போகும் போது இதை இயற்கை சென்ட் ஆகப் பயன்படுத்தலாம். 2 முதல் 3 மாதங்கள் வரை கெடாது. தோலையும் சேதப்படுத்தாது. விருப்பப்பட்டால் பன்னீர் சேர்த்துக் கொள்ளலாம்.

சிலருக்கு கை, கால், முகத்தில் தேவையில்லாத முடிகள் முளைக்கும், இதற்கு கிர்ணி பழ விதை பவுடர், ஓட்ஸ் பவுடர், கோரைக்கிழங்கு பவுடர், ஆவாரம்பூ பவுடர் தலா 100 கிராம் எடுத்து விழுதாக அரைத்துத் தேய்த்துக் குளித்து வர முகத்தில் உள்ள முடியை வலுவிழக்கச் செய்து தோலை மிருதுவாக்கும். ஆவாரம் பூ சருமத்துக்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

வயோதிகத்தின் அறிகுறி கண்களில் தான் முதலில் தெரியும். இதற்கு பால் பவுடர், கிர்ணி பழ விதை பவுடர் இரண்டையும் சம அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து கண்களைச் சுற்றிலும் பூசி, 5 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். சுருக்கங்கள், தொய்வு, கருவளையம், சோர்வு நீங்கி, கண்கள் பிரகாசிக்கும்.
கடுகு எண்ணெய்யுடன், கிர்ணி பழ விதை பவுடரை கலந்து பாதங்களில் பூசினால் பஞ்சு போல் மிருதுவாகும்.

Friday, 6 April 2018

Black Sesame Seeds

                             Sesame   seeds

                                         


Health  Benefits  Of Black  Sesame   seeds:

1. Encourages Bone Health and Prevents Osteoporosis: Sesame seeds are a good source of bone-forming minerals (calcium, phosphorous, magnesium). One tablespoon of unhulled seeds contain about 88mg of calcium, more than a glass of milk. Plus the high zinc content increases bone mineral density.

2. Helps you sleep Better: Sesame contain the stress-relieving minerals magnesium and calcium. It also contains amino acid tryptophan that help produce serotonin, which assists moods and helps you sleep better by restoring the normal sleep pattern.

3. Relieves arthritis: The high copper content in sesame seeds helps in reducing pain and swelling associated with arthritis. In addition, this mineral keeps your bones and joints flexible and healthy.

4. Skin beautifying: The oleic acid in sesame seed offers skin softening as well as cell regenerating benefits. And the linoleic acid helps restore skin barrier and prevents moisture loss from your skin.  While the high phytosterols are great for reducing redness and itching and combating weather damaged skin.

5. Prevents Cancer: Sesame seeds contain anti-cancer compounds including phytic acid, magnesium and phytosterols. And the phytosterol content of sesame (especially the black sesame seeds)  is the highest of any commonly consumed seeds and nuts.

6. Protects Liver: The antioxidants in the black sesame seeds protect the liver from oxidative damage, helping you maintain healthy liver function.

7. Alleviates Anemia: Black sesame seeds have higher iron content than other varieties, so they’re highly recommended for people suffering from anemia.

8. Good for cardiovascular health:  The lignans (sesamin and sesamolin) present in the sesame seeds are believed to reduce blood cholesterol  levels and prevent high blood pressure. Also, magnesium and calcium are important essential minerals that help regulate blood pressure.

9. Prevents Asthma: The magnesium in the sesame seeds help to prevent airway spasm in asthma patients.

10. Improves eye health: As per traditional Chinese medicine, eyes are closely related to liver healthy. When liver is affected the eyes become tired and dry and vision may become blurred. Black sesame seeds are a natural tonic for liver, which in turn is believed to nourish and support eyes’ function.

Read  Tamil:
                        எள்



















Thursday, 5 April 2018

அம்மான் பச்சரிசி

                                 அம்மான்    பச்சரிசி

                                                                



 மருத்துவப்   பயன்கள்:
                                                     அம்மான் பச்சரிசி முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. துவர்ப்பு மற்றும் இனிப்புச் சுவையானது. குளிர்ச்சித் தன்மையானது.

அம்மான் பச்சரிசி குடல் புழுக்களைக் கொல்லும், உள்ளுறுப்புகளிலுள்ள காயங்களை ஆற்றும், மலமிளக்கும், சுவாசத்தைக் சீராக்கும், இருமலைக் தணிக்கும், பெண்களுக்குப் பால் சுரப்பதைத் தூண்டும், பால் மருக்களைக் குணமாக்கும்.

அம்மான் பச்சரிசி சிறு செடி வகையைச் சார்ந்தது. தரிசு நிலங்கள், சாலை ஓரங்கள் மற்றும் ஈரப்பாங்கான சமவெளி நிலங்களில் சாதாரணமாகக் காணப்படும். ஆண்டு முழுவதும் பரவலாகக் காணப்படுபவை. 50 செ.மீ. வரை உயராமாக வளரும்.

அம்மான் பச்சரிசி இலைகள் எதிரெதிராக அமைந்தவை, சொரசொரப்பானவை. பச்சை, சிவப்பு நிறங்களில் இலைகள் காணப்படும். சிறுபூக்கள் தொகுப்பாக கணுக்களில் அமைந்திருக்கும்.

அம்மான் பச்சரிசி பூக்கள் வெண்மையாகவும், காம்புகளுடன் காணப்படும். தாவரத்தில் எப்பகுதியைக் கிள்ளினாலும் பால் வடியும். அம்மான் பச்சரிசிக்கு சித்திரப் பாலாடை என்கிற பெயரும் உண்டு.

தாய்ப்பால் சுரப்பு அதிகமாக பசுமையான அம்மான் பச்சரிசி செடிகளைச் சேகரித்துக் கொண்டு, நன்கு கழுவி, அரைத்து, எலுமிச்சம்பழ அளவு 1 டம்ளர் பாலில் கலக்கி, தினமும் காலை, மாலை இருவேளைகள் பாலூட்டும் தாய்மார்கள் குடிக்க வேண்டும்.

விந்து ஒழுகுதல் கட்டுப்பட அம்மான் பச்சரிசி மற்றும் கீழாநெல்லி ஆகியவற்றின் இலைகளைச் சம அளவாக எடுத்துக் கொண்டு, நன்றாக அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, 1 டம்ளர் எருமைத் தயிரில் கலக்கி காலை வேளையில் மட்டும் 15 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

இரத்தக் கழிச்சல் குணமாக அம்மான் பச்சரிசி இலைகளை அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, 200 மி.லி. பசும்பாலுடன் கலந்து, தினமும் காலையில் மட்டும் மூன்று நாட்கள் குடிக்க வேண்டும்.

அம்மான் பச்சரிசி பால் ஒரு அரிய மருந்தாகும். அம்மான் பச்சரிசி பாலை முகத்தில் தடவ, முகப்பரு, எண்ணெய்ப்பசை ஆகியவை மாறும். காலில் பூசிவர, கால் ஆணி, பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்பு ஆகியவை மறையும். பால் பருக்கள் மீது பூச அவை உதிரும். இதனை உள் ம‌ருந்தாகக் கொடுக்க இரைப்பு குறையும்.

ஆஸ்த்துமா, வாய்ப்புண் ஆகியவற்றுக்கான மருத்துவத்திலும் அம்மான் பச்சரிசி துணை மருந்தாகப் பயன்படுகின்றது. அதிக அளவில் உட்கொண்டால் வாந்தியைத் தூண்டும். இதன் நோய் எதிர்ப்புச் சக்தியும், காசநோயைக் கட்டுப்படுத்தும் பண்பும் மருத்துவ ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.





Wednesday, 4 April 2018

நெல்லிக்காய்

                                    நெல்லிக்காய்

                                                                     



மருத்துவப்   பயன்கள்:
                                                     நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் கொண்டது; குளிர்ச்சித் தன்மையானது; கண்களுக்குக் குளிர்ச்சி தரும்; செரிமானத்தைக் தூண்டும்; சிறுநீர் பெருக்கும்; குடல் வாயுவை அகற்றும்; பேதியைத் தூண்டும்; உடல்சூடு, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெள்ளை, ஆண்குறிக் கொப்புளங்கள் போன்றவற்றைக் குணமாக்கும்.

நெல்லி வேர், நரம்புகளைச் சுருக்கும்; வாந்தி, அருசி, மலச்சிக்கல் ஆகியவற்றைக் குணமாக்கும். நெல்லிக்காய் வற்றல், குளிர்ச்சி தரும்; இருமல், சளி போன்றவற்றைக் குறைக்கும்; உடலைப் பலப்படுத்தும்.

நெல்லிக்காய் தைலம் நாட்டு மருந்துக் கடைகளில் பரவலாக விற்பனை செய்யப்படுகின்றது. இதனைத் தலையில் தேய்த்துத் தலைமுழுகிவர கண்கள் பிரகாசமாக இருக்கும்; பொடுகு கட்டுப்படுவதுடன், முடி உதிர்தலும் தடுக்கப்படும்.

நெல்லிக்காய் மரப்பிசின் பல மருந்துகளில் கூட்டுப்பொருளாகச் சேர்கின்றது.
நெல்லிக்காய் சிறிய அல்லது நடுத்தர உயரமான, இலையுதிர்க்கும் மர வகையைச் சார்ந்தது. நெல்லி இலைகள் புளியன் இலையை விட சிறியவை. இறகு வடிவமானவை. நெல்லி கிளைகள் இறகு போன்ற தோற்றமுள்ளவை.

நெல்லி ஆண், பெண் பூக்கள் தனித்தனியானவை. சிறியவை, வெளிறியவை, பசுமையானவை, அடர்த்தியானவை, கொத்தானவை. நெல்லிக்காய்கள் கொத்தானவை. இளம் மஞ்சள் நிறமானவை. பழங்கள் 2.5 செ.மீ. வரை குறுக்களவு கொண்டவை. சதைப்பற்றானவை. உருண்டையானவை. ஆறு விதைகள் கொண்டவை.

தமிழ்நாடு முழுவதும் காடுகளில் வளர்கின்றன. வீட்டுத் தோட்டங்களில், தோப்புகளில் விளையும் மரங்கள் பெரிய கனிகளுடன் காணப்படும். நெல்லிமுள்ளி எனப்படும் உலர்ந்த காய் எல்லாக் காலங்களிலும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். நெல்லிக்காய் இலை, காய், வற்றல் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்ததாக உள்ள நெல்லிக்கனிகள் பழ வகைகளுள் மிகவும் முக்கியமானவை. நெல்லிக்காய் வற்றல், நெல்லிக்காய் ஊறுகாய் போன்றவை ஆரோக்கியம் தரும் உணவுப் பொருட்களாகும்.

நெல்லி மரங்கள், வீட்டு மராமத்து வேலைகளுக்கும் பயன்படுபவை. நெல்லிக்காய் பட்டைகள், சாயங்கள் மற்றும் தலைக்கழுவி நீர்மம் தயாரிப்பதில் பயன்படுகின்றன.

நெல்லி கட்டைகள், நீரால் எளிதில் பாதிக்கப்படுவதில்லை. நெல்லிக்காய் இலைகள், ஏலக்காய் செடிகளுக்கு உரமாகவும் பயன்படுகின்றன. இவை மண்ணில் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கின்றன.

நெல்லிக்காய் சாறு 15 மி.லி., தேன் 15 மி.லி., எலுமிச்சம்பழ சாறு 15 மி.லி. ஒன்றாகக் கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டுவர மதுமேகம் குணமாகும்.



திரிபாலா சூரணம்

விதை நீக்கிய நிலையில் உள்ள கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் மூன்றையும் தனித்தனியாக காயவைத்து தூள் செய்து வைத்துக்கொண்டு, சம அளவாக ஒன்றாகக் கூட்டி நன்கு, கலந்து, காற்றுப்புகாத கண்ணாடி சீசாவில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே திரிபலம் அல்லது திரிபலா சூரணம் எனப்படும் ஒரு பலநோக்கு கை மருந்து ஆகும்.

2 தேக்கரண்டி பொடியை ½ லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். 6 முறைகள் தினமும் கண்களை இந்த நீரால் பஞ்சு கொண்டு துடைக்க கண் எரிச்சல் மற்றும் கண்ணில் தண்ணீர் வருவது கட்டுப்படும்.

புளிச்ச ஏப்பம், செரியாமை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகளுக்கு ஒரு தேக்கரண்டி பொடியை வாயிலிட்டு, வெந்நீர் அருந்த வேண்டும். இதை ஒரு மந்திர மருந்தாக உணரலாம்.

ஒரு பிடி நெல்லக்காய் இலைகளை 1 ½ லிட்டர் நீரில் இட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதைப் பொறுக்கும் சூட்டில் வாயில் ஊற்றிக் கொப்பளிக்க வேண்டும். அல்லது பட்டையை தூள் செய்து வைத்துக் கொண்டு, தேனில் குழைத்து புண்ணின் மீது தடவ வாய்ப்புண் குணமாகும்.

சாதாரணமாக நமக்கு குறைந்த செலவில் கிடைக்கும் ஒரு சத்துள்ள பழம் நெல்லிக்காய் ஆகும். நுரையீரல் சார்ந்த காசநோயை இது விரைவாக குணப்படுத்துவது மருத்துவ ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நெல்லிக் கனிகளை உலர்த்தி வற்றலாக்கி, வைட்டமின் “சி” சத்து குறைவால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்களை நெல்லிக்காய் குணப்படுத்தும். மேலும், இது உடலில் எதிர்ப்பு சக்தியை நிலைப் படுத்தக் கூடியது. மொத்தத்தில் நெல்லிக்காய ஒரு கற்ப மருந்தாகத் திகழ்கின்றது.






Tuesday, 3 April 2018

கரிசலாங்கண்ணி

                                          கரிசலாங்கண்ணி

                                                       


மருத்துவப்    பயன்கள்:
                                                        கரிசலாங்கண்ணி கல்லீரலை உறுதிப்படுத்தும்; வீக்கத்தைக் குறைக்கும்; காமாலையைக் குணப்படுத்தும்; உடலைப் பலமாக்கும்; மலமிளக்கும்; ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்; முடி வளர்ச்சியைத் தூண்டும்.
இதற்கு இரத்தத்திலுள்ள அமிலத்தன்மையைக் குறைக்கும் ஆற்றலும் உண்டு. இதனால், இரத்த சோகை, தோல்நோய்கள் போன்றவையும் கட்டுப்படும். கரிசாலை இலைகளை, கீரையாகத் தொடர்ந்து உபயோகித்து வர, கண் பார்வை தெளிவடையும்.
இராமலிங்க வள்ளலார், கரிசாலையை கற்ப மூலிகைகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். கரிசாலைச் சாற்றால் வாய் கொப்பளித்து வர பற்களும் ஈறுகளும் நாக்கும் சுத்தமாகும். மேலும், தொண்டை நோய்கள் குணமாவதுடன் நுரையீரலும் சுத்தமடையும் என்கிறார்.
கரிசலாங்கண்ணி முழுத்தாவரம் கைப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. கரிசலாங்கண்ணி சிறு செடி வகையைச் சார்ந்தது. இலைகள், எதிரெதிராக அமைந்தவை. அகலத்தில் குறுகியவை, நீண்டவை, சொரசொரப்பானவை. மலர்கள், சிறியவை, வெண்மையானவை, சூரியகாந்தி மலர் போன்ற தோற்றம் கொண்டவை. கிளைகளின் நுனியில் காணப்படும்.
வாய்க்கால் மற்றும் வயல் வரப்புகள், சாலையோரங்கள், ஆற்றங்கரைகளில் கரிசலாங்கண்ணி களைச்செடியாக வளர்ந்து, மிகவும் செழிப்பாகக் காணப்படும். கரிசாலை, கையான், கரிப்பான், பிருங்கராஜம், யாந்தகரை ஆகிய முக்கியமான மாற்றுப் பெயர்கள் கரிசாலைக்கு உள்ளது. முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படும்.
மஞ்சள் காமாலை தீர பசுமையான கரிசலாங்கண்ணி இலைகளைச் சுத்தம் செய்து, பசையாக அரைத்து, கொட்டைப்பாக்கு அளவு, ஒரு டம்ளர் மோரில் கலந்து, உள்ளுக்கு சாப்பிட்டுவர வேண்டும். காலை, மாலை வேளைகளில், 7 நாட்கள் வரை இவ்வாறு செய்ய வேண்டும். இந்தக் காலத்தில், உணவில் உப்பு, புளி நீக்கி பத்தியத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
மார்பில் கட்டிய கோழை இளகி வெளிப்பட தேவையான அளவு பசுமையான கரிசாலை இலைகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். இதனை, நன்றாகக் கழுவி, பசையாக அரைத்துக்கொள்ள வேண்டும். இத்துடன், 2 பங்கு தண்ணீர் சேர்த்துக் குழைத்து 2 பங்கு நல்லெண்ணெயில் கலந்து, அடுப்பில் வைத்து, நீர் வற்றுமளவிற்கு காய்ச்சி, காற்றுப்புகாத கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்த வேண்டும். இதனை ¼ தேக்கரண்டி அளவு, 100 மி.லி. காய்ச்சிய பாலில் கலந்து, குடித்துவர வேண்டும். தினமும் இரண்டு வேளைகள் இவ்வாறு செய்ய வேண்டும்.
கண் பார்வை தெளிவடைய கரிசலாங்கண்ணித் தைலம்:கரிசலாங்கண்ணி இலைச் சாற்றுடன், சோற்றுக் கற்றாழை, நெல்லிக்காய் ஆகியவற்றின் சாறுகளையும் சம அளவாகச் சேர்த்து, அவற்றின் மொத்த அளவிற்குத் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, சுண்டவைத்து, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தைலத்தால் தலைமுழுகிவர வேண்டும். மேலும், தலைவலி, உடல்வலி, உடல் அசதி ஆகியவையும் தீரும்.
இளநரை மாற: கரிசலாங்கண்ணி இலைகளை நிழலில் உலர்த்தி, தூளக்கி, சலித்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் ½ தேக்கரண்டி அளவு, சிறிதளவு தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். 2 மாதங்கள் வரை இவ்வாறு தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
தலைமுடி அடர்த்தியாக வளர:கரிசலாங்கண்ணி இலைகளைப் பசைபோல அரைத்து, அடையாகத் தட்டி வெயிலில் உலர்த்த வேண்டும். இதனை நல்லெண்ணெயில் ஊறவைத்து தலையில் தொடர்ந்து தடவிவர முடி கருமையாக செழித்து வளரும், முடி உதிர்தலும் கட்டுப்படும்.
மலச்சிக்கல் தீர தினமும், காலையில் 5 பசுமையான இலைகளை மென்று சாப்பிட்டுவர வேண்டும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி:பெரிய, மஞ்சள் நிறமான பூக்களைக் கொண்ட, கரிசலாங்கண்ணியின் வளரியல்பிலிருந்து மாறுபட்ட தாவரம். அதிகமாக இயற்கையில் வளர்வதில்லை. மஞ்சள் கரிசலாங்கண்ணி, பொற்றலை, பொற்கொடி, பொற்றலைக் கரிப்பான், பொற்றலைக் கையாந்தகரை ஆகிய பெயர்களும் மஞ்சள் கரிசாலைக்கு உண்டு.
சில இடங்களில், முக்கியமாக நீர்வளம் மிகுந்த இடங்களில் வளரும். பெரும்பாலும், வீடுகளில், அழகிற்காகவும், அதன் மருத்துவப் பயன்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றது.
மஞ்சள் கரிசாலையை உட்கொள்ள, உடலுக்குப் பொற்சாயலையும், (பொற்றலைக்கை யாந்தகரை பொன்னிறமாகக் கும்முடலை… அகத்தியர் குணபாடம்), கண்ணிற்கு ஒளியையும் தெளிவையும் உண்டாக்கும்.
பாண்டு, சோகை, காமாலை முதலியவற்றைக் கட்டுப்படுத்தும். கல்லீரல், மண்ணீரலைப் பலப்படுத்தும். பித்த நீர்ப்பெருக்கியாகவும், மலமகற்றியாகவும் செயல்படும். தோல் நோய்களைக் கட்டுப்படுத்தும். இலைகளே முக்கியமாக மருத்துவத்தில் பயன்படுகின்றன. கரிசலாங்கண்ணியின் மருத்துவ உபயோகங்கள் இதற்கும் பொருந்தும் அனைவரும் எளிதில் வளர்த்துப் பயன்பெறலாம்.
முடி கருமையடைய ஒரு பிடி இலைகளை, 200 மி.லி. தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தேய்த்துவர வேண்டும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் ஜலதோஷம் தீர இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, சிறிதளவு தேனுடன் குழைத்து உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்.
இருமல் தணிய இலைச்சாறு ½ லிட்டர், நல்லெண்ணெய் ½ லிட்டர், ஒன்றாக்கி, சிறு தீயில் நீர் வற்றும்வரை காய்ச்சி, வடிகட்டி பத்திரப்படுத்திக் கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை, வேளைகளில் ஒருவாரம் வரை சாப்பிட்டுவர வேண்டும்.
மலச்சிக்கல் தீர இலையை, பருப்பு சேர்த்துக் கடைந்து, நெய் சேர்த்து, சாதத்துடன் பிசைந்து உட்கொள்ள வேண்டும்.






சடாமஞ்சள்

                                             சடாமஞ்சள்

                                                             



மருத்துவப்    பயன்கள்:
                                                        சடா மாஞ்சில் வேர் காரச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. மிகுந்த மணமுள்ளது. உடல் வெப்பத்தை அதிகரிக்கும்; மூச்சு இரைப்பைக் கட்டுப்படுத்தும்; சிறு நீர் பெருக்கும்; கோழையகற்றும்: சிலந்தி, நஞ்சு, காய்ச்சல், உட்சூடு, வாய்வு, கழிச்சல், கண் நோய்கள், இருமல், இரைப்பு போன்றவற்றை குணமாக்கப் பயன்படுகின்றது.
சடா மாஞ்சில் காக்கை வலிப்பு, குஷ்டம், பேதி முதலியவற்றையும் கட்டுப்படுத்தும். இதய துடிப்பைச் சீராக்கும். வேர் எண்ணெய், முடியைக் கருமையாக்கும் தன்மை கொண்டது. பல பதிவுரிமை செய்யப்பட்ட கூந்தல் தைலங்களில் இது சேர்கின்றது.
இமய மலையின் 3000 முதல் 4500 மீ உயரமான பகுதிகள், வட காஷ்மீர், பூட்டான், பர்மா, இலங்கை முதலிய பகுதிகளில் விளைகின்ற ஒரு பூங்கோரை இனத்தைச் சேர்ந்த செடி வகைத் தாவரம். 60 செமீ வரை உயரமானவை.
இந்த செடிக்கு நீண்ட ஆணிவேரும் பல சல்லி வேர்களும் உண்டு. வேர் முண்டுகள் தடித்தும் நீண்ட தாடி போலவும் காணப்படும். வேர்களே மருத்துவத்தில் உபயோகப்படுகின்றன. இலைகள், இலைக் காம்புகள் ஆகியவை வாடிப்போன தோற்றத்துடன் காணப்படும். அடிமட்டக் கீழ் இலைகள் 20 செமீ நீளத்திலும் இலைக் காம்பில் இருந்து குறுகியும் இருக்கும். மேற்பகுதி இலைகள் சிறியவையாகவும் பெரும்பாலும் நீள்வட்ட வடிவிலும் காணப்படும்.
சடா மாஞ்சில் பூக்கள் சிறு கொத்துகளில் சிறியதாகக் காணப்படும். பழங்கள் சிறியவை. மெல்லிய மயிரிழைகள் சூழக் காணப்படும். சடாமாசி, சடாமஞ்சி, பைகாசி தகரம் ஆகிய பெயர்களும் உண்டு.
செடியிலிருந்து வேர்கள் சேகரிக்கப்பட்டு காய வைக்கப்பட்டு நாட்டு மருந்து கடைகளில் சடாமாஞ்சில் என்கிற பெயரில் பொதுவாகக் கிடைக்கும். இவை அதிக மணம் கொண்டவை. வேரிலிருந்து ஒரு வித மஞ்சள் நிறமான எண்ணெய் தயாரிக்கப்படுகின்றது.
கூந்தல் அடர்த்தியாக வளரவும், இரவில் ஆழ்ந்த உறக்கம் உண்டாகவும் சடாமாஞ்சில் தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து கூந்தல் எண்ணெயாக தலையில் தேய்த்து வரலாம்.
வாதவலி கட்டுபட வேரைப் பொடித்து ¼ தேக்கரண்டி அளவு தேனில் உள்ளுக்கு கொடுக்க வேண்டும்.
கோழை வெளியாக 1கிராம் அளவு பொடியை நீரில் கலந்து, நாள் ஒன்றுக்கு இரண்டு முறைகள் வீதம் உட்கொள்ள வேண்டும்.
செரிமானத்தைச் சீராக்கவும், பேதி மருந்தாகவும், இசிவு நோய்களுக்கும் பயன்படும் சடாமாஞ்சில், காஷ்மீரின் (2500 மீ உயரத்தில்) சில பகுதிகளில் மட்டும் வளரும் சடாவல்லி அல்லது வாலெரியானா எனப்படும் பதிவுரிமை செய்யப்பட்ட தாவர மருந்துக்கு மாற்று மருந்தாகவும் உபயோகமாகின்றது.
சடா மாஞ்சில் ஆண்டுத் தேவை நமது நாட்டில் 1000 டன்கள் அளவாகும். இமய மலையின் உயரமான பகுதிகள் இதனை வாணிப ரீதியாக வளர்ப்பதற்கு ஏற்றவையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.




குடசப்பாலை

                                           குடசப்பாலை

                                                


மருத்துவப்   பயன்கள்:
                                                      குடசப்பாலை முழுத்தாவரம் துவர்ப்புச் சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. பட்டை, பசியைத் தூண்டும்; உடல் வெப்பத்தைக் குறைக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும். கழிச்சல், நீரிழிவு, வெள்ளை, கரப்பான், சிரங்கு இவைகளைக் குணமாக்கும்; காய்ச்சலையும் கட்டுப்படுத்தும்.

இந்தியா முழுவதும் 1200மீ. உயரமான காடுகளில் பொதுவாக வளரும் தாவரம், சில நேரங்களில் 10 மீ. வரை உயரமுள்ள மரமாகவோ, குத்துச்செடிபோலவோ காணப்படும். இலைகள் 20-30 செ.மீ. நீளத்தில், நீள்வட்ட வடிவத்தில், மெல்லிய, தெளிவாகத் தெரியும் நரம்புகளுடன் காணப்படும்.
இலைக் காம்புகள் சிறியவை. பூக்கள், வெள்ளையானவை, நறுமணத்துடன் கூடியவை. நுனியில், தொகுப்பாக காணப்படும். காய்கள் 20-25 செ.மீ. வரை நீளமானவை, மெல்லியவை, உருளை வடிவானவை. கனிகள், சாம்பல் நிறத்தில், வெள்ளைப் புள்ளிகளுடன் காணப்படும். விதைகள், 1 செ.மீ. வரை நீளமானவை பழுப்பான, பறக்கும் ரோமங்களுடன் பொருந்தியிருக்கும்.
தாவரத்தை எங்கு கீறினாலும் வெண்மை நிறமான பால் வடியும். தமிழகத்தின் சில காட்டுப்பகுதிகளில் இயற்கையாக வளர்கின்றது. அலங்காரத் தாவரமாக பூங்காக்களிலும், வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றது.
குடசப்பாலைக்கு, கருப்பாலை, கசப்பு வெட்பாலை, குளப்பாலை என்ற பெயர்களும் உண்டு. பட்டை, விதைகள், இலைகள் மருத்துவப் பயன் கொண்டவை. குடசப்பாலை பட்டை, விதைகள் ஆகியவற்றை நாட்டு மருந்துக் கடையில் இருந்து வாங்கியும் உபயோகப்படுத்தலாம்.
சீதக் கழிச்சல் குணமாக விதை அல்லது பட்டை ½ முதல்1 கிராம் அளவு, 1 டம்ளர் தண்ணீரில் இட்டு, கொதிக்கவைத்து, இரண்டு வேளைகள் குடிக்க வேண்டும்.
வயிற்றுப்போக்கு குணமாக வேரின் பட்டைகளைச் சேகரித்துக் கொண்டு, கழுவி, இடித்து, இரசம் செய்ய வேண்டும. வேளைக்கு அரைக் கோப்பை அளவு ரசத்தை காலை, மாலை இரண்டு வேளைகள் குணமாகும் வரை குடிக்க வேண்டும்.
குடல் புழுக்களைக் கட்டுப்படுத்த அதிகாலையில், சிறிதளவு வெல்லத்தை உட்கொண்டு, பிறகு ஒரு சிட்டிகை அளவு குடசப்பாலை விதைத் தூளை உட்கொள்ள வேண்டும். 7 நாட்களுக்கு இவ்வாறு செய்து வரவேண்டும்.
எரிச்சல் உணர்வுடன் தோன்றும் வயிற்று வலியைக் குணப்படுத்த விதைகளை நிழலில் உலர்த்தி, வறுத்து, தூள் (விதைத் தூள்) செய்து கொள்ள வேண்டும். ஒரு சிட்டிகை தூள் வீதம், தினமும் இரண்டு வேளைகள், 3 நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும்.
பல் வலி தீர பட்டையிலிருந்து குடிநீர் செய்து வாய் கொப்புளிக்க வேண்டும்.
தோல் நோய்கள் குணமாக பச்சையான பட்டையை மைய அரைத்து, நெல்லிக்காய் அளவு பசையை 2 டம்ளர் நீரில் இட்டுக் காய்ச்சி, கசாயம் செய்து குடித்துவர வேண்டும். மேலும், பட்டைச் சாற்றை, சம அளவு தேங்காய் எண்ணெயில் இட்டு, நீர் வற்றும் வரை காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு, மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும்.
வெட்பாலை செதில் உதிர்படை என்கிற தோல் வியாதியைக் குணப்படுத்தப்ப பயன்படும் தைலமாகப் பயன்படுகிறது. துடைத்து சுத்தம் செய்த இலைகளை ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில் மூழ்க வைத்து மூன்று நாட்கள் வெயிலில் வைத்து, அந்த எண்ணெய்யை வடிகட்டி வைத்துக் கொண்டு, மேலே தடவி வரவேண்டும்.








கொட்டைக்கரந்தை

                            கொட்டைக்கரந்தை

                                              


   மருத்துவப்    பயன்கள்:
                                                          
                                                                                               கொட்டைக்கரந்தை உடலை பலப்படுத்தும்; குளிர்ச்சியுண்டாக்கும்; வாதத்தைக் குணமாக்கும், மலமிளக்கும். இலை, பூக்கள், உடலை பலப்படுத்தும்; குடல் புண்களை ஆற்றும். விதை, வேர், பசியைத் தூண்டும்; குடல் புழுக்களைக் கொல்லும்.
கொட்டைக்கரந்தை முழுத்தாவரம் கைப்புச் சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. இது பற்களுள்ள, நறுமணம் கொண்ட இலைகளை மாற்றடுக்கில் அடர்த்தியாகக் கொண்ட சிறு செடி வகைத் தாவரம். சிறு பந்து போன்ற, உருண்டையான, சிவப்பும், பச்சையும் கலந்த பூங்கொத்தினை நுனியில் கொண்டது.
இது தென்னிந்தியாவிற்கே உரிய மூலிகை. தோட்டங்களிலும், வயல் நிலங்களில் அறுவடைக்குப் பின்னர் இயல்பாக வளர்கின்றது. இதிலிருந்து மருத்துவத்திற்குப் பயனாகும் ஒருவித எண்ணெய் பெறப்படுகின்றது. நறுங்கரந்தை என்கிற மாற்றுப் பெயரும் உண்டு. இலை, பூ, விதை, வேர், வேர்ப்பட்டை போன்றவை மருத்துவப் பயன் கொண்டவை.
தோல்நோய்கள் குணமாக இலைத்தூள், வேளைக்கு ½ தேக்கரண்டி வீதம், தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட்டு வர வேண்டும்.

கொட்டைக்கரந்தைத் தைலம்
முடிவளர்ச்சிக்கும், முடி கருமையடையவும் கொட்டைக் கரந்தை தைலம் பயன்படும். கொட்டைக் கரந்தை இலைச்சாறு, தேங்காய் எண்ணெய், சம அளவாக எடுத்துக் காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்கான எண்ணெயாகப் பயன்படுத்திவர வேண்டும்.
வெள்ளைப்படுதல் குணமாக இலைகளை உலர்த்தித்தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு, வெந்நீரில் கலந்து குடித்துவர வேண்டும். தினமும் 3 வேளைகள், 10 நாட்களுக்குக் குடிக்கலாம்.
இரத்த மூலம் சரியாக வேர்ப்பட்டையை அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, வெண்ணெயில் கலந்து சாப்பிட வேண்டும்.
குடல் புழுக்கள் வெளியாக விதைகளைச் சேகரித்து, உலர்த்தி, தூள் செய்து, ஒரு தேக்கரண்டி அளவு, தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும்.

மூளை, இதயம், நரம்புகள் பலமடைய
பூக்காத செடிகளை வேருடன் பிடுங்கி, நிழலில் உலர்த்தி, பொடி செய்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் ஒரு தேக்கரண்டி அளவு, இரவில் பாலுடன் சாப்பிட வேண்டும். 6 மாதங்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
           










கல்யாண முருங்கை

                                      கல்யாண   முருங்கை

                                                 



மருத்துவப்   பயன்கள்:
                                                     கல்யாண முருங்கை பொதுவாக வயிற்றுப்புழுக்களைக் கொல்லும் பண்பினைக் கொண்டுள்ளது. இலை, சிறுநீர் பெருக்கும்; மலமிளக்கும்; தாய்ப்பால் பெருக்கும்; மாதவிலக்கைத் தூண்டும்; உடல் பலத்தை அதிகரிக்கும். பூக்கள், கருப்பையை சுத்தமாக்கும். பட்டை, கோழையகற்றும்; காய்ச்சல் நீக்கும்; குடற்புழுக்களைக் கொல்லும். விதை, மலமிளக்கும்.
கல்யாண முருங்கை முழுத்தாவரம் காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. தாவரம் முழுவதும் முட்களைக் கொண்ட, மென்மையான தண்டுக் கட்டையை உடைய மரம். தண்டு, கட்டை ஆகியவை பச்சை நிறமுடையதாகக் காணப்படும். இலைகள் அகன்றவை. பூக்கள் பளிச்சிடும் சிவப்பு நிறமானவை. விதைகள் உருட்டானவை, சிவப்பு நிறமானவை.
முருக்கமரம், கல்யாண முருக்கன், முள்முருக்கு என்கிற மாற்றுப் பெயர்களும் உண்டு. தமிழகமெங்கும் வேலிகளில், பரவலாகக் காணலாம். இலை, விதை, பூ, பட்டை ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை.
வெற்றிலை, மிளகு முதலிய கொடிவகைத் தாவரங்கள் பயிரிடப்படும் இடங்களில் அவை வளர்வதற்கு ஆதாரமாக கல்யாண முருங்கை மரம் வளர்க்கப்படுகின்றது.
மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்றுவலி குணமாக கல்யாண முருங்கை இலைச்சாறு 30 மி.லி. காலையில், வெறும் வயிற்றில் 10 நாட்கள் குடிக்க வேண்டும் அல்லது இலையிலிருந்து இரசம் தயாரித்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டுவர வேண்டும்.

குடற்புழுக்கள் வெளியாக
குழந்தைகளுக்கு: இலைச்சாறு 10 துளியில், சிறிதளவு வெந்நீர் கலந்து, உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்.
பெரியவர்களுக்கு : இலைச்சாறு 4 தேக்கரண்டி, சிறிதளவு தேன் கலந்து, உள்ளுக்குச் சாப்பிட வேண்டும். வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் மோர் குடிக்க வேண்டும்.

தாய்மார்களுக்கு பால்சுரப்பு அதிகமாக கல்யாண முருங்கை இலையைத் தேங்காய் எண்ணெயில் சமைத்துச் சாப்பிட வேண்டும்.
கீல்வாயு குணமாக தேவையான அளவு இலைகளை இலேசாக நசுக்கி, வதக்கி, இளஞ்சூடான நிலையில், பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்ட வேண்டும்.
புண்கள், தோல்நோய்கள் குணமாக பட்டையை நசுக்கி, வெந்நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, பாதிக்கப்பட்ட இடத்தைக் கழுவ வேண்டும்.
சீதபேதி குணமாக இலைச்சாறு ஒரு தேக்கரண்டி அளவுடன், அதே அளவு விளக்கெண்ணெய் சேர்த்துக் குடிக்க வேண்டும். காலை, மாலை, மூன்று நாட்களுக்கு இவ்வாறு செய்ய வேண்டும்.
கிராம மக்கள், கர்ப்ப காலத்தில் கல்யாண முருங்கை இலைகளை அரிந்து, சிறுபயறுடன் சேர்த்து, வேகவைத்துக் கொடுப்பர். இதனால், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சிறுநீர் எரிச்சல் குணமாகி, தாராளமாக சிறுநீர் இறங்கும்.
மேலும், பெண்களுக்குக் குழந்தைப்பேறு உண்டாக, 10 நாட்களுக்கு, கல்யாண முருங்கைப் பூ ஒன்றுடன், 4 மிளகு சேர்த்து, அரைத்து வெறும் வயிற்றில், காலையில் உள்ளுக்கு கொடுக்கிறார்கள்.




கல்யாணப்பூசணி

                                 கல்யாணப்பூசணி

                                                      



மருத்துவப்  பயன்கள்:
                                                   கல்யாணப்பூசணி காய், விதைகள், இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. சிறுநீர் பெருக்கும்; உடலைப் பலப்படுத்தும்; ஆண்மையயைப் பெருக்கும்; நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப் புண்கள், வயிற்று எரிச்சல், காக்கை வலிப்பு, பித்த நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றைக் குணப்படுத்தும். பதிவுரிமை செய்யப்பட்ட பல இலேகியங்கள், நெய் வகைகள் காயிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
பற்றுக்கம்பிகளைக் கொண்ட, தரையில் படரும் கொடி வகை. இலைகள், அகன்றவை, சுணையுடையவை. பூக்கள், வெளிர்மஞ்சள் நிறமானவை, ஆண், பெண் பூக்கள் தனித்தனியாகக் காணப்படும்.
காய் பெரியது, மேல்தோல் பச்சையாக, சாம்பல் பூசியவாறு இருக்கும். காயின் உட்பாகம் வெள்ளை நிறமான, சதைப் பற்றுக் கொண்டதாக இருக்கும். இந்தியா முழுவதும் காய்கறிப் பயிராகப் பயிரிடப்படுகின்றது.
காய், விதை ஆகியவை மருத்துவப் பயன்கொண்டவை. வெள்ளைப்பூசணி, சாம்பல் பூசணி, தடியங்காய் ஆகிய மாற்றுப் பெயர்களும் கல்யாணப்பூசணிக்கு உண்டு.
மார்கழி மாதத்தில், வீட்டு வாசலில் போடப்படும் கோலங்களின் மேல் சாணி உருண்டைகள் செய்து, அதன் மீது கல்யாணப்பூசணியின் ஆண் மலர்களால் அலங்கரிக்கும் வழக்கம் கிராமங்களில் இன்றும் உள்ளது.
வெள்ளைப் படுதல் குணமாக கல்யாணப்பூசணிக்காயைக் கீறி, உள்ளிருக்கும் சதைப்பற்றான வெண்பகுதியை எடுத்து அதனுடன் சமஅளவு செம்பருத்திப் பூ இதழ்கள் சேர்த்து, சிறிதளவு சர்க்கரை சேர்த்து, 25 கிராம் அளவு, காலையில் 10 நாட்கள் வரை சாப்பிட வேண்டும்.
உடல் சூடு நீங்க கல்யாணப்பூசணிக்காயைக் கீறி, சதைப் பகுதியை சுரண்டி, சேகரித்துக்கொண்டு, விதைகளை நீக்கி, வேகவைத்து, அரைத்து கொள்ள வேண்டும். அத்துடன், தேவையான அளவு, பால், தேன், நெய் கலந்து லேகியமாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த லேகியத்தை 2 தேக்கரண்டிகள், தினமும் இரண்டு வேளைகள், இரண்டு வாரங்கள் வரை சாப்பிட்டு வரவேண்டும்.
இளைத்த உடல் பருக்க கல்யாணப்பூசணி வற்றல்:கல்யாணப்பூசணிக்காய்த்துருவல் 5 கிலோ, 1 படி அவல், 30 கிராம் மிளகுத்தூள், ஒரு கை பச்சைமிளகாய், 15 கிராம் பெருங்காயம் ஆகியவற்றைக் கலந்து வேகவைத்து, கொட்டைப் பாக்கு அளவான உருண்டையாக உருட்டிக் காயவைத்து, வற்றலாக்கி, பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு, வேளைக்கு 4 உருண்டைகளை நல்லெண்ணெயில் வறுத்துச் சாப்பிட வேண்டும்.
குடல் தட்டைப்புழுக்கள் வெளியாக 25 கிராம் அளவு கல்யாணப்பூசணி விதைகளை எடுத்து, அரைத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு, 3 மணி நேரம் கழித்து, விளக்கெண்ணெய் 2 தேக்கரண்டி அளவு குடிக்க வேண்டும்.
புண்கள் குணமாக கல்யாணப்பூசணிக் காயை வேகவைத்து, உள்ளிருக்கும் சதைப் பற்றான பகுதியைக் கீறி, புண்கள் மீது வைத்துக் கட்டலாம்.
பிற பூசணி வகைகள்
1)பறங்கிக்காய்: ஏறுகொடி வகை. சமையலில் பெருமளவு பயன்படுகின்றது. காயின் உள்ளிருக்கும் சதையை வெயிலில் காயவைத்து, இடித்துத் தூளாக்கி, உள்ளுக்குக் கொடுக்க, இரத்தவாந்தி, கோழை ஆகியவற்றை நீக்கும். இந்தத் தூளை, சிறிது கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிட, கோடைக்கால வெப்பத்தினால் உண்டாகும் தாகம் குறையும்.
2)பறங்கிப் பூசணி: ஏறுகொடி வகை, காயின் மேற்புறமும், கீழ்புறமும் குழிவாக இருக்கும். உட்பாகம் மஞ்சள் நிறமான சதைப்பற்றுக் கொண்டதாக இருக்கும். காயின் பக்கங்களில் உள்ள வரிகள் தெளிவாகக் காணப்படும். காய்களைச் சமைத்துச் சாப்பிட, பேதியைத் தூண்டும். அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுப் புழுக்கள் உருவாகும்.







Monday, 2 April 2018

எள்

                                                எள்

                                                   


மருத்துவப்    பயன்கள்:
                                                       எள், முழுத் தாவரமும் இனிப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. வறட்சி அகற்றும். எள்ளில் அதன் விதையின் நிறத்தைக் கொண்டு வெள்ளை, கருமை, சிவப்பு என பல‌ வகைகள் அறியப்படுகின்றன‌. எள் வெப்பம் உண்டாகும். உடல் உரமாக்கும். சிறு நீர் பெருக்கும். பால் பெருக்கும். மலமிளக்கும். ருது உண்டாகும்.
காலையில் ஒரு பிடி எள்ளை உண்பது உடல் பலமடைய நல்லதாகப் பண்டைக் கால மருத்துவம் குறிப்பிடுகின்றது.
கண் தொடர்டபான நோய்களுக்கு மருந்தாகும். “இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு” என்கிற பழமொழி இன்னும் வழக்கத்தில் உள்ளது.
இந்தியாவில் ஏராளமாக பயிரிடப்படுகின்ற சிறு செடி. திலம் என்கிற மாற்றுப் பெயரும் உண்டு. இலை, பூ, காய், விதை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.
எள்ளில் இருந்து வடிக்கப்படும் எண்ணெய் நல்லெண்ணெய் எனப்படுகின்றது.
உணவிற்கான எண்ணெயாக நல்லெண்ணெய் பலவிதங்களில் பயன்படுகிறது.
நல்லெண்ணெயில் காரமோ, கசப்போ, இனிப்போ, துவர்ப்போ எது கலந்தாலும் இனிய சுவை தரும். எண்ணெய்க் குளியலில் நல்லெண்ணெய் முக்கிய இடம் வகிக்கின்றது.நல்லெண்ணெய் உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும் சிறப்புக் கொண்டது. 
பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகப்படுத்த 5கிராம் அளவு எள்ளை தினமும் காலையில் உட்கொள்ளலாம்.
எள் எண்ணெய்யை ( நல்லெண்ணெய்) 7 நாட்களுக்கு ஒரு முறை தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறிய பிறகு வெந்நீரில் குளித்து வர கண் சிவப்பு, கண் வலி குறையும்.
எள் பூவை நெய்யிலிட்டு வதக்கி இரவில் கண்ணின் மீது வைத்துக் கட்ட கண் பார்வை தெளிவடையும்.
எள் இலையை நெய்யில் வதக்கி கட்டிகள் மீது கட்ட அவை பழுத்து உடையும்.
மகளிர் தங்களது கர்ப்ப காலத்தில் அதிக அளவு எள் சாப்பிடுவது கருச்சிதைவை தூண்டும். பழங்காலத்தில் இது ஒரு இயற்கையான கருத்தடை முறையாகவும் இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read English:
                          Sesame Seeds







நந்தியாவட்டை

                                    நந்தியாவட்டை

                                                  


மருத்துவப்  பயன்கள்:
                                                     நந்தியாவட்டை பூ கைப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. முக்கியமாகக் கண் நோய்களுக்குப் பயன்படும் பல மருந்துகளில் இது சேர்கின்றது. கண்காசம், படலம், மண்டைக்குத்தல் ஆகியவை கட்டுப்படும்.
நந்தியாவட்டை பால், வேர், ஆகியவை காரச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. நந்தியாவட்டை பால் வெட்டுக் காயங்களைக் குணமாக்கும். நந்தியாவட்டை வேர், புழுக்களைக் கொல்லும்.
நந்தியாவட்டை புதர்ச்செடியாகவோ அல்லது குறுஞ்செடியாகவோ காணப்படும். நந்தியாவட்டை இலைகள், எதிர் அடுக்கில் அமைந்தவை. கரும்பச்சை நிறமானவை. பளபளப்பானவை. ஈட்டி வடிவமானவை.
நந்தியாவட்டை மலர்கள், நுனியில் தொகுப்பாக அமைந்தவை. வெண்ணிறமானவை. 5 இதழ்களுடன் கூடியவை. மலர் இதழ்கள் தட்டு போன்று விரிந்தவை. திருகு இதழ் வடிவமானவை. ஆண்டு முழுவதும் பூக்கள் மலர்ந்து கொண்டிருக்கும்.
நந்தியாவட்டை சமவெளிகள், கடற்கரை பகுதிகளில் பயிரிடப்படுகின்றன. நந்தியாவட்டை அழகுச் செடியாகவும், இதன் மருத்துவப் பயன்பாட்டிற்காகவும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. அடுக்கிதழான மலர்களைக் கொண்ட நந்தியாவட்டையும் உண்டு. ஆனால் 5 இதழ்களைக் கொண்ட பூக்களே மருத்துவத்தில் பயன்படுவதாகும்.
திருக்கோயில் நந்தவனங்களில் நந்தியாவட்டைச் செடி கட்டாயமாக வளர்ந்திருக்கும். நந்திபத்திரி, நந்தியாவர்த்தம், சுயோதனன் மாலை ஆகிய முக்கியமான மாற்றுப் பெயர்களும் உண்டு. நந்தியாவட்டை பால், பூ, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.
நந்தியாவட்டை பூ இதழ்களிலிருந்து சாறு எடுத்து சம அளவு தாய்ப் பாலுடன் கலந்து 2 துளிகள் கண்ணில் விட கண் சிவப்பு குணமாகும்.
நந்தியாவட்டை பூவால் ஒற்றடம் கொடுக்க வேண்டும். அல்லது 2 துளி பூச்சாற்றை கண்ணில் விட கண் எரிச்சல் குணமாகும்.
பல்வலி குணமாக ஒரு துண்டு வேரை வாயிலிட்டு 10 நிமிடங்கள் நன்கு மெல்ல வேண்டும். பிறகு துப்பி விடலாம்.
நந்தியாவட்டை வேர் ஒரு துண்டை நன்கு நசுக்கி ஒரு டம்ளர் நீரில் போட்டு ½ டம்ளர் அளவாக காய்ச்சி இரவில் மட்டும் ஒரு வேளை குடிக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.





தும்பை

                                              தும்பை

                                                         



மருத்துவப்   பயன்கள்:
                                                     
தும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. சளியைக் கட்டுப்படுத்தும்; மலமிளக்கும்; கோழையகற்றும்; மாதவிலக்கைத் தூண்டும்.
தும்பை இலைச்சாறு, தலைவலி, வாதநோய் போன்றவற்றைக் குணமாக்கும். தும்பை பூ, தாகம், காய்ச்சல், கண்ணோய் போன்றவற்றிற்கு மருந்தாகும்.
தமிழகமெங்கும், கிராமங்களில் சாதாரணமாகக் காணப்படும் செடி வகைகளில் தும்பைச் செடியும் ஒன்றாகும். பச்சைப்பசேல் நிறத்தில், கத்திபோல் நாலாபுறமும் நீட்டிக் கொண்டிருக்கும்.
கரும்பச்சை நிறமான இலைகள், நான்கு பக்கங்களைக் கொண்ட தண்டு, நடுவில் மஞ்சரித் தொகுப்பில் சுற்றி மலர்ந்துள்ள வெண்மையான, தேன்சத்து நிறைந்த நாக்கு வடிவ மலர்கள் இவற்றைக் கொண்டு தும்பைச் செடியை அனைவரும் அடையாளம் கண்டு கொள்ளலாம்.
பெரும்பாலும் மணற்பாங்கான நிலத்திலேயே தும்பை விரும்பி வளர்கின்றது. விவசாய நிலங்களில் இந்தச் செடி மழைக்காலங்களில் மிகச் சாதாரணமாகக் காணப்படும். முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. தும்பை இலை, பூக்கள் மருத்துவப் பயன் அதிகமானவை.
தும்பை மலர்களில் உற்பத்தியாகும் தேனைக் குடிக்க எப்போதும், எறும்பு, வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பிறவகைப் பூச்சிகள் காத்துக் கொண்டிருக்கும். தும்பை செடியைப் பிடுங்கினால் எளிதில் வேருடன் வந்துவிடும். வேரில் மண் ஒட்டாமல் வெண்மையாகவே காணப்படுவது தும்பையின் சிறப்பு அம்சமாகும். மேலும், எளிதாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரவும் தன்மையுடையது.
கடவுள் வழிபாட்டிற்கு தும்பைப் பூக்கள் பயன்படுகின்றன. காலையில், புதிய பூக்கள் சேகரிக்கப்பட்டு, மனத் தூய்மையின் அடையாளமாக வணங்கப்படுகின்றன. முருகக் கடவுளுக்குத் தும்பை மலர்களால் சிறப்பாக அர்ச்சுனை செய்யப்படுவதுண்டு.
25 தும்பை பூக்களை, ½ டம்ளர் காய்ச்சிய பாலில் இட்டு, ஒரு மணி நேரம் ஊற வைத்து, குழந்தைகளுக்குக் குடிக்க கொடுக்க குழந்தைகளின் தொண்டையில் கட்டிய கோழை வெளிப்படும்.
10 துளிகள் அளவு தும்பை பூச்சாற்றை, காலையில் மட்டும் குழந்தைகளுக்கு உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்கான சளி, இருமல், விக்கல் தீரும்.
தும்பை இலைச் சாறு 10 முதல் 15 மிலி வரை குடிக்க வேண்டும். தினமும் காலையில் மட்டும் 15 நாட்கள் செய்ய ஒவ்வாமை தீரும்.
தும்பைச் செடியை, இலை, பூக்களுடன் பறித்து வந்து, நன்கு கொதிக்க வைத்த தண்ணீரில் இட்டு வேது பிடிக்க ஒற்றைத் தலைவலி குணமாகும்.
தும்பைப்பூவைத் துணியில் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, 15 துளிகள் அளவு, அதே அளவு தேனுடன் கலந்து காலையில் குடித்துவர, நாக்கு வறட்சி,தாகம், அசதி போன்றவை தீரும்.
கொப்புளம், நமைச்சல், சிரங்குகள் குணமாக தும்பை இலைகளை அரைத்து, மேல் பூச்சாகப் பூச வேண்டும். 5 நாட்கள் வரை தொடர்ந்து செய்யலாம்.

பாம்புக் கடிக்கு முதலுதவி சிகிச்சை
தும்பை இலைகளை ஒரு கைப்பிடி அளவு நசுக்கி, உள்ளுக்குள் கொடுத்து, நிறைய தண்ணீர் குடிக்கச் செய்ய வேண்டும். தும்பை இலைச்சாறு 2 அல்லது 3 துளிகள் மூக்கிலும் விடலாம். இப்படிச் செய்தால் மயக்கம் தெளியவும் விரைவாக விஷமுறிவு ஏற்படவும் வாய்ப்பு ஏற்படும்.