< font color="white">All Tips
Showing posts with label Tamil mudras. Show all posts
Showing posts with label Tamil mudras. Show all posts

Monday, 9 April 2018

லிங்க முத்திரை

                                        லிங்க        முத்திரை

                                                  

      

லிங்க    முத்திரை:
                                           லிங்கம், வெப்பத்தின் வடிவமாகக் கருதப்படுகிறது. இது, வெப்பம் மற்றும் உயிர்சக்தியைத் தன்னிடத்தில் உள்ளடக்கி, நோய் க்கிருமிகள், உடலில் தேங்கி உள்ள கழிவுகளை அகற்றவல்லது. பல மணி நேரம் நடைப்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வியர்த்தல் உள்ளிட்ட பலனை சில நிமிடங்களில் இந்த முத்திரை தந்துவிடும்.

செய்முறை:
இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று கோத்துக் கொள்ள வேண்டும். ஒரு கை கட்டை விரலை மட்டும் உயர்த்திக்கொள்ள வேண்டும்.
பெண்கள்: வலது கை மேற்புறமாக இருக்குமாறு கோத்து, இடது கை கட்டைவிரலை உயர்த்த வேண்டும்.
ஆண்கள்: இடது கை மேல்புறமாக இருக்குமாறு கோத்து, வலது கட்டை விரலை உயர்த்த வேண்டும்.
கட்டளைகள்:
சப்பளங்கால் இட்டு அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து அல்லது நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றியபடி இந்த முத்திரையைச் செய்ய வேண்டும்.
அதிகமான வியர்வை மற்றும் படபடப்பு தோன்றினால், முத்திரை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
அதிக நேரம் இந்த முத்திரையைச் செய்தால் சோர்வு ஏற்படலாம். முத்திரை செய்யும் காலங்களில் பழங்கள், பழச்சாறு, மோர், தண்ணீர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
பெரியவர்கள் காய்ச்சல் சமயத்தில் இந்த முத்திரையைச் செய்யலாம். குழந்தைகள் செய்யக் கூடாது.

Read  More:  பூஷன் முத்திரை

பலன்கள்:

1.பருமனான உடல்வாகு உடையவர்கள், வியர்வை வரும் அளவுக்கு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்ய இயலாதோர் காலை, மாலை என வெறும் வயிற்றில் இந்த முத்திரையைச் செய்ய, உடல் எடை குறையும்.
2.வியர்வை வராமல் உடல் வறட்சியாக இருப்போர் இதைச் செய்தால், உடல் வெப்பமாகி, வியர்வை உண்டாகி சரும வறட்சியைப் போக்கும். இவர்கள் வியர்வை வரும் வரை முத்திரையைச் செய்யவேண்டும்.
3.ஏ.சி-யால்  அலர்ஜி இருப்பவர்கள், ஏ.சி அறையில் இருக்க வேண்டிய சூழ்நிலையில், அதிகக் குளிர், நடுக்கம் போன்றவை ஏற்பட்டால், இந்த முத்திரையைச் செய்துவர, உடல் வெப்பமாகி இதமாக இருக்கும்.
4.ஐஸ்க்ரீம், கூல்டிரிங்க்ஸ் குடித்த பிறகு, 10 நிமிடங்கள் வரை இந்த முத்திரையைக் குழந்தைகள் செய்தால், சளி, இருமல் போன்றவை வராமல் தடுக்கலாம்.
5.ஆண்கள், விந்துவின் வீரிய விருத்திக்கு காலை, மாலை முறையே ஐந்து நிமிடங்கள் என்ற அளவில் ஒரு மாதம் வரை செய்ய வேண்டும்.
6ஆஸ்துமா பிரச்னையுள்ளோர், குளிரில் அல்லது குளிர்ச்சியான பொருட்களை உண்ட பின் இளைப்பு ஏற்பட்டால், இந்த முத்திரையை 10 நிமிடங்கள் செய்ய இளைப்பு கட்டுக்குள் வரும்.
7.காய்ச்சல் என்பது உடலில் உள்ள நோய்க் கிருமிகளின் தொற்றை அழிப்பதற்கு உடல் ஏற்படுத்தும் அதிகப்படியான வெப்பமே. காய்ச்சல் மற்றும் குளிர் காய்ச்சல் உள்ளவர்கள், முத்திரையைச் செய்ய காய்ச்சல் குறையும். ஆனால், குழந்தைகளுக்கு இந்த முத்திரை மூலம் காய்ச்சலைக் குறைக்க முயற்சி செய்யக் கூடாது.
8.தலையில் நீர் கோத்தல், சளியுடன் கூடிய இருமல், குளிர் காய்ச்சல் போன்ற தொந்தரவுகளுக்கு இந்த முத்திரை நல்ல பலன் தரும்.

Read   English:
                             Linga Mudra


Read  More:காம ஜெய முத்திரை

Sunday, 8 April 2018

சூன்ய முத்திரை

                                 சூன்ய         முத்திரை

                                                               

செய்முறை:
                                             விரிப்பில் அமர்ந்து கொண்டு இந்த முத்திரையை செய்ய வேண்டும். நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.


Read   More:ருத்ர முத்திரை
பலன்கள்:
                           இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.

எச்சரிக்கை:
                              1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.
2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.  

Read   English:
                            Shunya Mudra


Read   More:அபான முத்திரை

Saturday, 7 April 2018

சூரிய முத்திரை

                                        சூரிய       முத்திரை

                                                              



செய்முறை:
                             மோதிர விரலை மடக்கி, உள்ளங்கையின் நடுவில் தொட வேண்டும். கட்டை விரலால் மோதிர விரலை மிதமாக அழுத்த வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்கவேண்டும்.
     
Read  More:பிராண முத்திரை

    
பலன்கள்:
                         உடலின் வெப்பநிலையை அதிகரித்து, பசியைத் தூண்டும். செரிமானத்துக்கு உதவும். எப்போதும் உடலை லேசாகவும் சுறு சுறுப்பாகவும் வைத்திருக்க உதவும். உடலில் அதிகக் கொழுப்புச்சத்து உடையவர்களுக்கு முத்திரையைச் செய்யத் தொடங்கிய ஒரு மாதத்தில், கெட்ட கொழுப்பு குறையத் தொடங்கும். அதிக உடல் எடையால் சிலருக்குக் குழந்தை பேறு தள்ளிப்போவதை இந்த முத்திரை தடுக்கும்.

ஹைப்போ தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள், ஒரு வேளை மட்டும் 20 நிமிடங்கள் முத்திரையைச் செய்ய, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தி, உடலைச் சுறுசுறுப்பாக்கும். சருமவறட்சி, குளிரைத் தாங்க முடியாதது, மந்தகுணம், மனச்சோர்வு, நாக்கு தடித்தல், தொண்டை வீக்கம் ஆகியவை சரியாகும். பார்வைத்திறன் மேம்படும். கண் புரை வராமல் தடுக்கும். கண்களைச் சுற்றிநீர் கோத்தது போல இருப்பவர்களுக்கு, வீக்கம் குறையும். ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, கொழுப்புச் சேருதல் (Atherosclerosis)ஆகியவற்றைச் சரி செய்து, சீரான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுக்கும்.

Read   English:
                             Surya Mudra


See   More:
                      சின் முத்திரை
                      

Friday, 6 April 2018

அபான முத்திரை

                                      அபான        முத்திரை
                                                                         
                             


செய்முறை:
                              கட்டை விரல் நுனியுடன், நடுவிரல் மற்றும் மோதிர விரலின் நுனியைச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.  மற்ற இரு விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். இந்த முத்திரையில் நிலம், நெருப்பு, ஆகாயம் என்ற மூன்று சக்திகளும்  ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

பலன்கள்:
                              வயிறு, குடலில் தங்கியிருக்கும் கழிவுகள் கீழ் நோக்கித் தள்ளப்படுவதால், நாட்பட்ட மலச்சிக்கல் பிரச்னை சரியாகும். வயிறு,  குடல் சுத்தமாகும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, மனம் தெளிவடையும். பள்ளிச் செல்லும்  மாணவர்கள் இரவில் 20 நிமிடங்கள் செய்து வர, காலையில் மலம் கழிக்கும் பிரச்னை இருக்காது. மந்த குணம், பசியின்மை  நீங்கும். வயிற்றில் தங்கியுள்ள வாயு பிரிந்து, வாயுவால் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.

மூலக்கடுப்பு உள்ளவர்கள் கடுப்பு குறையும் வரை செய்யலாம். மூலத்துக்காக அறுவை சிகிச்சை செய்தவர்கள், ஒரு மாதத்துக்குப்  பிறகு இந்த முத்திரையைச் செய்து வர, மீண்டும் மூலத்தில் கட்டி, மூலம் தொடர்பான பிரச்சினைகள் வராது. முத்திரையைத்  தொடர்ந்து செய்து வர, வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, இதயம், கர்ப்பப்பை  போன்ற உறுப்புகளின் இயக்கம் சீராகும். 

மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வலியைப் போக்க ,5-10 நிமிடங்கள் மட்டும் செய்யலாம். சிறுநீரகக் கல்லடைப்பு, நீரடைப்பு,  சிறிது சிறிதாகச் சிறுநீர் வெளியேறுதல் போன்ற பிரச்னையிருப்பவர்கள், தண்ணீர், இளநீர், கரும்புச்சாறு போன்றவற்றை அருந்திய  அரை மணி நேரத்தில், நாள் ஒன்றுக்கு ஐந்து முறை என்ற கணக்கில், 20 நிமிடங்கள் செய்யலாம். மூக்கடைப்பு, தலைபாரம்,  தலையில் நீர் கோத்தல், மூச்சு வாங்குதல், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்னைகள் சரியாகும்.       

Read  English:
                            Apana Mudra

See  More: 
                     முத்திரை            









சின் முத்திரை

                                            சின்        முத்திரை

                                                               


செய்முறை:
                               இருகைகளையும் முழங்கால் மீது உள்ளங்கை மேல் நோக்கி இருக்குமாறு வைத்து கட்டைவிரல் ஆட்காட்டி விரல் நுனியைத் தொட்டவாறு லேசான அழுத்தம் தரவேண்டும்.
 காலை, மாலை என 10 முதல் 15 நிமிடம் தினமும் செய்ய வேண்டும். 
இந்த முத்திரையை தரையில் அல்லது சேரில் அமர்ந்து கொண்டு செய்யலாம். 
1 மாதம் தொடர்ந்து இந்த முத்திரையை செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

பலன்கள்:
                           இது தியானத்திற்கு ஏற்றது. சிந்தனை தெளிவு அடையும். நரம்பு மண்டலங்கள் நன்றாக செயல்படும். இரத்த அழுத்தம் சீர்ப்படும்.
இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் அறிவு கூர்மையாகி நினைவாற்றலை அதிகரிக்கும். தூக்கமின்மையை போக்கும். கோபம் குறையும்.

Read  English:
                            Chin Mudra

பிராண முத்திரை

                          பிராண     முத்திரை

                                                         

செய்முறை:
                             சுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல் என மூன்று விரல்களின் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக வைத்திருப்பது மிக முக்கியம்.

பிராண முத்திரையைச் செய்யும்போது, கை நடுக்கம் ஏற்பட்டால், செய்வதை நிறுத்தவும். பிராண சக்தி அதிகமாகிவிட்டதை கைநடுக்கத்தின் மூலம் உடல் உணர்த்துகிறது. அதீத இயக்கங்கள் Aggressive behaviour) கொண்டவர்கள், இதை செய்யக் கூடாது. வயதானவர்கள் இரவு 8 மணிக்கு மேல் இந்த முத்திரையைச் செய்ய வேண்டாம். தூக்கம் கலைந்துவிடும்.

பலன்கள்:
                         இந்த முத்திரையை 10 நிமிடங்கள் செய்தால், உடலில் உள்ள உயிர் சக்தி (Energy level) அதிகரிக்கும். பிரச்னைகளின் வீரியம் குறையும். இடுப்பு, முதுகு வலிகளால் அவதிப்படும் போது, இந்த முத்திரையைச் செய்துவந்தால், வலியின் வீரியம் குறைந்து, நாளடைவில் குணமாகும். 
கண்ணாடி அணிந்திருப்பவர்கள், தினமும் 40 நிமிடங்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிராண முத்திரை செய்தால், பார்வைத் திறன் மேம்படும்.  கிட்டப்பார்வை, தூரப் பார்வை பிரச்னைகள் சரியாகும். தொடர்ந்து 40 நிமிடங்கள் செய்ய முடியவில்லை எனில், ரிலாக்ஸ் செய்துகொண்டு மீண்டும் செய்யலாம். 10 நிமிடங்களாகப் பிரித்தும் செய்யலாம். 

சிலருக்கு இந்த முத்திரை செய்யும்போது கண் எரிச்சல், கண்களில் நீர் வழிதல், கண் பொங்குதல் போன்ற பிரச்னைகள் வரலாம். ஒரு பஞ்சை, சாதாரண நீரில் நனைத்து, கண்களின் மேல் வைத்துக்கொள்ளவும். பிறகு, இளஞ்சூடான நீரில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் வைக்க வேண்டும். இப்படி மூன்று நிமிடங்கள் வரை செய்ய, கண் பிரச்னைகள் சரியாகும். இரவு நேரம், பௌர்ணமி நிலவை 15 நிமிடங்கள் பார்த்தாலும் இந்த மூன்று பிரச்னைகளும் சரியாகிவிடும்.

Read  English:
                            prana mudra




ஞான முத்திரை

                                      ஞான     முத்திரை

                                                        



செய்முறை:
                              
  •  கையின் கட்டை விரல் நுனியும் ஆள்காட்டி விரல் நுனியும் மிக மென்மையாக தொட்டுக்கொண்டிருக்குமாறும், ஏனைய மூன்று விரல்களும் லேசாக உள்ளே வளைத்துக்கொண்டிருக்குமாறும் வைப்பதே இம்முத்திரையின் அமைப்பாகும்.
  •  இம்முத்திரையை ஆகாயத்தை நோக்கி வைக்கும் போது ஞான முத்திரை எனவும், பூமியை நோக்கி வைக்கும் போது சின் முத்திரை எனவும் கூறப்படுகிறது.
  •  இம்முத்திரையை பத்மாசனத்திலோ அல்லது சுக ஆசனத்திலோ (சம்மணம்) அமா்ந்து கொண்டு இரு கைகளிலும் முத்திரையை அமைத்து கொண்டு தொடையின் மேல் வைத்து வாசிக்காற்றை சீராக செலுத்தவேண்டும். கவனத்தை முத்திரை மற்றும் வாசியின் மீது செலுத்த முழுப்பயனையும் பெறலாம்.

பலன்கள்:
  
  • இம்முத்திரையை 15 நிமிடம் தினமும் மூன்று தடவை செய்து வர முழு பலனை பெறலாம்.
  • இம்முத்திரை அளவுக்கு அதிகமான  தூக்கத்தை குறைப்பதோடு, தூக்கமின்மையையும் போக்கவல்லது.
  • மனம் சம்பந்தபட்ட பிரச்சனைகளான ஹிஸ்டிரியா, மனச்சோர்வு, மனச்சிதைவு மற்றும் கோபம் போன்றவற்றை சரிசெய்ய உதவுகின்றது.
  •  நரம்புகளை உற்சாகப்படுத்துவதோடு, நரம்பு சம்பந்தபட்ட பிரச்சனைகளான நரம்பு தளா்ச்சி, செரிபரல் பால்சி (cereberal palsy), மல்டிபிள் க்ளிரோசிஸ் (multiple sclerosis) போன்ற நோய்களை சரிசெய்ய இம்முத்திரை பயன்படுகிறது.
  • நுரையீரல் சளியினால் ஏற்படும் தொந்தரவை சரிசெய்ய இம்முத்திரை உதவுகிறது.
  • நீண்டகாலம் இம்முத்திரையை செய்து வர மனக்கண் திறப்பதோடு ஆன்ம ரீதியான பலனை பெறலாம்.
  • இம்முத்திரையை நீண்டகாலம் செய்துவர புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.
  •  உடலில் வாயு தொல்லை உள்ளவா்கள் இம்முத்திரையை தவிர்ப்பது நல்லது.

Saturday, 31 March 2018

பூஷன் முத்திரை

                                பூஷன்    முத்திரை
         
                                         



செய்முறை:
                                 பூஷன்” என்றால் “சூரியன்” என்று அர்த்தம். இந்த முத்திரை இரண்டு கைகளிலும் இரண்டு விதமாக செய்யவேண்டும்.
அதாவது வலது கையின் ஆள்காட்டி விரல், மற்றும் நடு விரலின் நுனியும் பெருவிரல் நுனியை தொட்டுக்கொள்ளவேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக வைத்துக்கொள்ளவேண்டும்.
இடது கையின் நடு விரல், மற்றும் மோதிர விரல் நுனியும் பெருவிரல் நுனியை தொட்டுக்கொள்ளவேண்டும். மற்ற ஆள்காட்டி விரலும் சிறுவிரலும் நேராக வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரத்திலும் செய்யலாம். சில நிமிடங்கள் செய்தாலே இது நல்ல பலன் கொடுக்கும். உணவு சாப்பிட்டபின் இந்த முத்திரை பயிற்சி செய்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

இந்த முத்திரை பயிற்சியால் நிலம் காற்று ஆகாயம் பஞ்சபூத சக்திகள் நமது உடலுக்கு அதிகம் கிடைக்கிறது. அதாவது ஒரு கையால் சக்தி பெறப்பட்டு மற்றொரு கையால் சக்தி உடலுக்கு  கொடுக்கப்படுகிறது.   

பலன்கள்:
                        இந்த முத்திரை பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொடுக்கிறது.உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.
உடல் உள் உறுப்புகளில் இருக்கும் நஞ்சு (TOXIN) என்று சொல்லப்படும் கெட்ட கழிவுகள் வெளியேறுகிறது.காற்று சக்தி அதிகம் கிடைப்பதால் நாம் சுறுசுறுப்பாக இயங்கமுடியும்.நிலத்தின் சக்தி அதிகம் கிடைப்பதால் நமது உடலின் எலும்பு மற்றும் தசைகள் நன்றாக சக்தியுடன் பலமடைகிறது.
நுரையீரல் நன்றாக வேலை செய்து ஆக்ஸிஜனை அதிகமாக பெற்றும் கார்பண்டையாக்ஸைடை முழுவதும் வெளியேற்றியும் நுரையீரல் அதிக சக்தி பெறுகிறது.உடல் உறுப்புகள் வயிறு, கல்லீரல், மன்னீரல், பித்தப்பை சக்தி பெற்று நன்றாக வேலை செய்கிறது. நரம்புகள் வலுவடைந்து நரம்பு தளர்ச்சி நீங்குகிறது.குமட்டல் மற்றும் வாந்தியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
உடலில் வாயுக்கோளாறுகளை நீக்குகிறது.
வயிறு மற்றும் குடல்கள் சக்தி பெற்று அஜீரணத்திலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.சாப்பிட்டு அரை மணிநேரம் கழித்து இந்த முத்திரை பயிற்சி செய்தால் நமது உணவு நன்றாக ஜீரணமாகிறது.                           
    
Read  English:
                            Pushan Mudra    

காம ஜெய முத்திரை

                                      காம   ஜெய    முத்திரை




    பலன்கள்:

                                           அதீத காம சிந்தனை மற்றும் அதீத புணர்ச்சியால் விந்து விரயமாவதை குறைக்கவும் காம எண்ணங்களை குறைக்கவும் இந்த காம ஜெய முத்திரை பயன்படுகிறது இதனால் காமம் அடக்கபடுவதில்லை அதற்கு பதிலாக இது காமத்தை உண்டாக்கும் சக்தியை ஆன்மீக சக்தியாக உருமாற்றுகிறது மின்சார சக்தி வெப்ப சக்தியாக ஒளி சக்தியாக காந்த சக்தியாக மாறுவதை iron box, Tube light, Fan, motor ஆகியவற்றில் பார்த்திருப்பீர்கள் அது போல இது ஆன்மீக உயர்வுக்கு தேவைப்படும் சக்தியாக உருமாறுகிறது

மேலும் ஜீரண மண்டல செயல்பாட்டை ஊக்குவிக்கிறது நாம் உண்ணும் உணவில் உள்ள வைட்டமின் சக்திகளை உடல் ஏற்றுக்கொள்ளும்படி செய்கிறது படம் தெளிவாக உள்ளதால் செய்முறை விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்
                

Friday, 30 March 2018

காற்று முத்திரை (ஃப்பிரித்வி முத்திரை)

                                காற்று     முத்திரை
                            
                              

       
    செய்முறை:
                                சுட்டு விரலை கட்டை விரலின் அடிப்பகுதியிலும் கட்டை விரலால் சுட்டுவிரலின் மேல் இலகுவாகத் அழுத்தியும் மற்றைய விரல்கள் நீட்டியும் இருக்க வேண்டும்.

      பலன்கள்:
                                 மூட்டு வாதம், ஏனைய வாத நோய்கள் தீரும்.
 கழுத்து முதுகெலும்பு அழற்சி (Cervical Spondilytis) முக நரம்பு செயலிழப்பு (facial paralysis), வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு சரியாகும். நரம்பு மண்டலத்தை பாதுகாத்து மன அழுத்தத்தை குறைத்து, தலைவையையும் போக்குகிறது. உடலில் இருக்கும் அதிகப்படியான வாயுவை குறைக்கிறது. மலச்சிக்கலை சரியாக்குகிறது. இந்த முத்திரை வைத்துக்கொண்ட சில நிமிடன்களிலேயே தூக்கமின்மை நீங்கி தூக்கம் கண்களை தழுவும்.

Read   English:
                            Vayu Mudra

பூமி முத்திரை

                                                         பூமி      முத்திரை
                
                                            


           செய்முறை:
                                           பூமி முத்திரை என்றும் சொல்லப்படும். மோதிர விரல் நுனியால் கட்டைவிரலை தொடவேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.

                   பலன்கள்:
                                            மண்ணின் சக்தி அதிகமாகும் போது நமது எலும்புகள் கார்டியாலஜ், தோல், தலைமுடி, நகம், தசைகள், உள் உறுப்புகள் அனைத்தின் சக்தியும் அதிகரிக்கிறது உடலின் சக்தியும் அதிகரிக்கிறது. நோய் தடுப்பு சக்தியும் அதிகமாக்கி உடல் நலத்தை பாதுகாக்கிறது.
                             
 உடல் பலவீனமாக உள்ளவர்கள் ரத்தம் குறைவாக உள்ளவர்கள் இம்முத்திரையைத் தொடர்ந்து ஒரு நாளில் 30 நிமிடங்கள் வரை வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உடலுக்கு சக்தி கிடைக்கும்.

மாதவிடாய் பிரச்சினை போய் எடை குறைய தினமும் காலையும் மாலையும் 10 அடிக்கு நடைப்பயிற்சியும், இயற்கை உணவும், நில முத்திரை தினமும் 30 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

எலும்புகளின் அடர்த்திக்குறைவை நீக்கும். எலும்புகளுக்கும் மூட்டுக்களுக்கும் சக்தி கொடுக்கும் முத்திரை. இந்த முத்திரை வைத்துக்கொண்ட சில நிமிடங்களிலேயே தூக்கமின்மை நீங்கி தூக்கம் கண்களை தழுவும்.

உடலின் பலவீனத்தைப்போக்கி எடையை அதிகரிக்கச் செய்யும். இம்முத்திரையை ஒரு வேளைக்கு 15 நிமிடங்கள் என்று 45 நிமிடங்கள் செய்யலாம். தைராய்டு சுரப்பிகளின் அதிகப்படியான சுரப்பைக்குறைக்கிறது.
                                         
                                                                             
Read  English:
                           prithvi mudra

ஆகாய முத்திரை

                                ஆகாய      முத்திரை

                                   
     செய்முறை:
                                   தரை விரிப்பின் மீது சம்மணமிட்டோ, நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றியோ செய்யலாம்.ஒரு நாளைக்கு இரு வேளை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.நின்றுகொண்டோ, நடந்துகொண்டோ செய்யக் கூடாது.
ஆகாய முத்திரையை ஒரு கையில் மட்டும் செய்யக் கூடாது.
                                                        
                                                   கட்டை விரல் நுனியுடன் நடுவிரல் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.  

      பலன்கள்:

                                 பயணங்களால் ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, ஜெட்லாக் காதுவலி, காது இரைச்சல் போன்றவற்றைத் தவிர்க்க, இதைச் செய்யலாம். பயணம் தொடங்குவதற்கு ஐந்து முதல் 10 நிமிடங்களுக்கு முன்பும் இந்த முத்திரையைச் செய்யலாம்.

                                               வயதாகும்போது காதுகளில் கேட்கும் திறன் குறையும். கேட்கும் திறன் மேம்பட இந்த முத்திரை உதவும்.
பல்வலி, ஈறுகளில் ஏற்படும் வலி, பற்கூச்சம் ஆகியவற்றுக்கு இந்த முத்திரையைச் செய்யலாம்.

                                             மன அழுத்தம் குறைய இரு வேளையும் இந்த முத்திரையைச் செய்யலாம்.

                                           அதிக நேரம் ஹெட் செட், தொலைபேசி, கைபேசி ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் தொந்தரவுகளுக்கு இந்த முத்திரையைச் செய்யலாம்.

                                         காது அடைப்பு, காது மந்தம், காது சவ்வு கிழிதல், காதில் சீழ் வழிதல் பிரச்னைகளுக்கு முதலுதவிபோல இந்த முத்திரையைச் செய்த பின், தகுந்த மருத்துவரை அணுகலாம்.

                                        வெர்ட்டிகோ, தள்ளாட்டம், நிலை தடுமாற்றம் போன்ற பிரச்னைகளுக்கு ஒருமாதம் வரை தொடர்ந்து செய்ய வேண்டும். காரணமின்றி ஏற்படும் விக்கல், கொட்டாவி விடுவதால் தாடையில் ஏற்படும் பிடிப்பு (Lock jaw) ஆகியவற்றை உடனடியாகச் சரிசெய்யும்.

                                        குழந்தைகள், வயோதிகர், இதயநோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு ஏற்படும் இதயப் படபடப்பு, முறையற்ற இதயத்துடிப்பு (Irregular heart beat), முறையற்ற ரத்த அழுத்தம் ஆகியவை மட்டுப்படும்.
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குறைய 2-5 நிமிடங்கள் மட்டும் செய்யலாம்.

                                      தினமும் இரு வேளை ஐந்து நிமிடங்கள் செய்ய, எலும்பு அடர்த்திக் குறைதல் பிரச்னை தடுக்கப்படுகிறது.

                                    அதீத உற்சாகம், அதிக துக்கம், கவலை, பயம், அதிக படபடப்பு, அதிக சிந்தனை கட்டுக்குள்வர இந்த முத்திரை உதவும்.
                                 
     Read   English:
                                 Aakash Mudra




சுரபி முத்திரை

                               சுரபி    முத்திரை

                                           


               செய்முறை:
                                                                விரிப்பின் மீது சப்பணம் இட்டு அல்லது நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றிச் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை என ஒவ்வொரு முறையும் 10-20 நிமிடங்கள் வரை செய்யலாம்.
இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று இணைப்பதுபோல வைக்கவும்.
நடு மற்றும் ஆள்காட்டி விரல் ஒரு குரூப், சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல் ஒரு குரூப். கட்டை விரல் தனி என பிரித்து கொள்ள வேண்டும்.
இடது கை ஆள்காட்டி விரல் நுனியால் வலது கை நடுவிரலைத் தொட வேண்டும். இடது கை நடு விரல் நுணியால் வலது கை ஆள்காட்டி விரலைத் தொட வேண்டும்.
இடது கை சுண்டு விரல் நுனியால் வலது கை மோதிர விரலைத் தொட வேண்டும். இடது கை மோதிர விரல் நுனியால் வலது கை சுண்டு விரலைத் தொட வேண்டும். கட்டை விரல்களை எதனுடனும் சேர்க்காமல், நெஞ்சைப் பார்த்தபடி நீட்ட வேண்டும்.

               பலன்கள்:
                                    * அதிகப்படியான உடல் வெப்பம் குறையும்
.
                                                      * தைராய்டு, பிட்யூட்டரி, அட்ரினல் போன்ற நாளமில்லாச் சுரப்பிகள், நரம்பு முடிச்சுகள் தூண்டப்பட்டு அவற்றின் குறைபாடுகள் நீங்குகின்றன.

                                                      * ‘கௌட்’ எனப்படும் வாதநீர் தேக்கத்தையும், ரூமேட்டிசம் (Rheumatism) எனப்படும் மூட்டு நோய்த் தாக்கத்தையும் குறைக்கும்.
                                                      
                                                      * செரிமானச் செயல்பாட்டைச் சீரமைத்து, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்கள் குணமடைய உதவுகிறது.
           
               

Read  English:
                            Surabhi Mudra

பைரவி முத்திரை

                              பைரவி     முத்திரை

                                     
             
   செய்முறை:
                                                                         

                                ஒரு வசதியான நிலையில் உட்கார்ந்து போது இந்த முத்திரை இயக்கப்பட வேண்டும்.இடது மேல் கால்கள் மற்றும் வலது கை மீது ஒய்வு இரண்டு கைகளையும் வைத்து. உள்ளங்கையில் மேல்நோக்கி எதிர்கொள்ளும் வேண்டும் மற்றும் விரல்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அது ஆத்மா ஞானம் மேலே வெளிச்சம் பிரதிபலிக்கிறது என்ற இந்த முத்ரா இந்து மதம், புத்த மற்றும் ஜைன உருவத்தின் காணப்படுகிறது.


பயன்கள்:
                          கல்விக்கு பயன் அளிக்கவும், உடல் ஆரோக்கியம் தரவும் இம்முத்திரை பயன்படுகிறது. ஸ்வாதிஷ்டான சக்கரத்தை தூண்ட வல்லது இது. நீரிழிவுநோயால் ஏற்படும் அதிக பசி, தாகம் போன்றவை குறையவும், சிறுகுடல், பெருங்குடல், கணையம், சிறுநீரகம் நன்கு செயல்படவும் இம்முத்திரை பயன்படுகிறது.

Read    English:
                              Bhairava Mudra


Thursday, 29 March 2018

ருத்ர முத்திரை

                          ருத்ர     முத்திரை

                                       


  

செய்முறை:


காம உணர்சிகளை அதிகரிக்க உறுதுணை புரியும் ருத்ர முத்திரை.
படத்தில் உள்ளதைப் போல பெருவிரல் நுனி , சுட்டு விரல் நுனி மற்றும் மோதிரவிரல் நுனி ஆகியவற்றை ஒன்றாக இணைத்து, நடுவிரல், சுண்டு விரல் நேராக வைத்திருத்தல் வேண்டும். இதுவே ருத்ர முத்திரையாகும்.இதனை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை செய்யலாம்.

                                                                                                      
                                          கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல்களின் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். நடுவிரலும் சுண்டுவிரலும் நீட்டி இருக்க வேண்டும்.நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து, கால்களைத் தரையில் பதித்தோ, விரிப்பின் மீது சப்பளங்கால் போட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்தோ, 10 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
                                     தந்த்ரா என்பதில் உள்ள "தந்" உடலிலுள்ள சக்தியையும், "த்ரா", அதைக்கடத்தும் தன்மையையும் குறிக்கும். தாந்திரீகத்தில்நாபி முக்கிய இடம்பெற்றது. சிவ சம்ஹிதையில் நாபிச்சக்கரத்தின் முக்கியத்துவம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
பெருவிரல், சுட்டு விரல், மோதிர விரலின் நுனியை ஒன்றாகச் சேர்த்து, மற்ற விரல்களை நீட்டியபடி வைக்கவும். இவ்வாறு 20 நிமிடம் இந்த முத்திரையை செய்ய வேண்டும்

                                                                                                                                             பலன்கள்:                                                                                                                                                         

                                       இம்முத்திரை தாம்பத்தியத்திற்கு உறுதுணையாய் இருக்கும். உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி, எதிர்ப்பு சக்தியைத் தரும். குறைந்த ரத்தஅழுத்தம்,மயக்கம், இதயக் கோளாறுகளை நீக்கும். சோர்வாக இருக்கும்போது இதை செய்தால் சோர்வு நீங்கி உடனடியாகப் புத்தணர்ச்சி கிட்டும்.

பார்வைத்திறனைக் கூர்மைப்படுத்தும். ரத்த அழுத்தப் பிரச்சனை, சுவாசப் பிரச்சனைகளைச் சீர்செய்யும்.மன அழுத்தத்தால் ஏற்படும் இறுக்கம், கழுத்து, முதுகு, இடுப்பு மற்றும் மார்பக வலி ஆகியவற்றை இந்த முத்திரை குறைக்கும்.ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள், கட்டிகள் ஆகியவற்றைச் சரிசெய்யும்.

வயோதிகத்தில் ஏற்படும் நினைவாற்றல் பாதிப்பு நோய்களான நடுக்குவாதம் (Parkinson), அல்சைமர் பாதிப்பு உள்ளவர்கள் மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவர முன்னேற்றம் காணலாம்.


Read  English:
                            Rudra Mudra